தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் GPS கருவி பொருத்திய இருசக்கர வாகனங்கள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த எஸ்பி ஆல்பர்ட் ஜான்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள திருப்பத்தூர் நகர காவல் நிலையம் பகுதியில் இருந்து ஆசிரியர் நகர் வரை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் GPS கருவி பொருத்திய இருசக்கர வாகனங்கள் விழிப்புணர்வு பேரணி திங்கட்கிழமை இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இந்த GPS பொருந்திய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி அவசர எண் 100க்கு வரும் அழைப்புக்கு விரைவாக சென்று உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஏற்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் எஸ்பி புஷ்பராஜ், டிஎஸ்பிகள் விநாயகம், செந்தில், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..