திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கலை அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ப. பூங்குழலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இரா.தேவதாஸ் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் பிரபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டு உத்திகளையும், உடல் நலம் மனநலம் சார்ந்த கருத்துரைகளையும் வழங்கினர்.

மேலும் கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ் தன்னம்பிக்கை வழிகாட்டி உரை ஆற்றினார். மேலும் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வை ஆசிரியர்கள் சிந்தியா, கார்த்திக் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியில் ஆசிரியை ஷீலா விக்டோரியா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *