மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில், சேடப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை…

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டில் நடத்திய கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டிகளில், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தோல்பாவைக் கூத்து குழு போட்டியில் முதல் இடமும், தோல்பாவைக் கூத்து தனி போட்டியில் மூன்றாம் இடமும், பாவனை நடிப்பில் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களுக்கு சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவர்கள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் மதுரை மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) சாயி சுப்புலட்சுமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை யும் போட்டிக்கு சிறப்பாக மாணவர்களை தயார் செய்த பட்டதாரி ஆசிரியர் சிவாவை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து முனியப்பன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஈஸ்வரி, சேடபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் செந்தில்வேல், உதவித் தலைமை ஆசிரியர் பாண்டி, விமலா, ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *