ஆலங்குளம் பேரூராட்சியில் ரூ.6இலட்சம் மதிப்பில் புதிய டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலைப் பேரூராட்சிக்கு 15-வது மானிய நிதிக்குழு மானியம் மூலம் டிராக்டர் வாங்க ரூ6இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் புதிய டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) வேங்கட கோபு தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் SD.ஜாண் ரவி முன்னிலை வகித்தார்.பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் புதிய டிராக்டரை ,பணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *