மத்தூர் அருகே புளியாண்டப்பட்டி அருள்மிகு புதூர் ஸ்ரீ.மாரியம்மன் கோவில் 5-ஆம் ஆண்டு கலச பூஜை திருவிழா

கிருஷ்ணகிரி,பிப்.10- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் புளியாண்டப்பட்டி அருள்மிகு புதூர் ஸ்ரீ .மாரியம்மன் கோவில் ஐந்தாம் ஆண்டு கலச பூஜை விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புளியாண்டப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக மேல தாளத்துடன் ஊர்வலம் எடுத்து வந்தனர். அப்போது பெண்கள் சாமியாடினர். இதைதொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய கிராமிய தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *