தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு காவலா குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, விழையாட்டுவிழா பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து தலைமை ஏற்று தலைமை உரை வழங்கினார்.
உதவி ஆசிரியர் கமலம் வரவேற்புரை ஆற்றினார்.
ஊத்துமலை காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டியன், வடக்கு காவலாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் சிவன் துரை வழக்கறிஞர் சபரி கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியில் கல்வியிலும் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள் இவ்விழாவில் அதிமுக கிளை செயலாளர் வெள்ளத்துரை. பாரதியஜனதா கட்சி கிளை தலைவர் செல்லத்துரை, தேமுதிக கட்சி நிர்வாகி கேப்டன் சண்முகவேல், எஸ் எஸ் முத்து,
குட்டிதுரை, வி மாடசாமி. சுரேஷ் , மாரியப்பன், வெள்ளத்துரை , மற்றும் சத்துணவு அமைப்பாளர் உதவியாளர், மற்றும் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ,கலந்து கொண்டனர்.
விழா முடிவில் பள்ளி ஆசிரியர் ஸ்டெல்லா சாந்த ஷீலா நன்றியுரை ஆற்றினார் அதனையெடுத்து பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.