செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் திடீர் மாற்றம் குறித்து
கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தி
அடைந்துள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சியின்
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட
செயலாளராக இருந்து வந்தவர் எடையாளம் கி.குமரவேல்,இவர் மாவட்ட செயலாளராக இருந்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கல்வெட்டு திறப்பு விழாபாமக கொடி ஏற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெருமுனை கூட்டம் மூத்த முன்னோடிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சி கட்சி வளர்ச்சி குறித்த பணிகள்
மாற்றுக் கட்சியில் இருந்து பாமகவில் இளைஞர்களை இணைப்பது உள்ளிட்ட பணிகளை செம்மனவே செய்து வந்துள்ளார்.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை குழு எந்த ஒரு முன் காரணமும் மின்றி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்
திடீரென மாவட்ட செயலாளர் குமரவேலை மாற்றியது கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு சேர்வதாக வலைதளங்களில் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து பாமக தலைமை குழு தவறான முடிவு எடுத்துள்ளது என கட்சி நிர்வாகிகள் இடையே
கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *