தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டி காசிநாதபுரத்தைச் சேர்ந்த எம் சிவக்குமார் தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக நியமிக்கப் பட்டுள்ளார்.

மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள சிவக்குமார் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள சிவக்குமாரை தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான இ.ராஜா , தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.தங்கராஜ் பாண்டியன் மற்றும்
கட்சி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் , மாவட்ட, ஒன்றிய ஊராட்சி பஞ்சாயத்து நிர்வாகிகள் , உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *