நத்தமேடு கிராம மக்கள் சோகம்
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ்(32). இவர் வெல்டர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் தன்னுடைய ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கொத்தவாச்சேரி முதல் நத்தமேடு கிராமம் வரை
புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது .
அப்போது ஒதுங்கி செல்ல வழி இல்லாததால் ரோடு ரோலர் பின்னால் சிவராஜ் நின்றிருந்தார். இந்நிலையில் ரோடு ரோலர் ஓட்டுநர்,
சிவராஜ் பின்பக்கம் நிற்பதை கவனிக்காத நிலையில் அவரது இருசக்கர வாகனத்தில் ரோடு ரோலர் மோதி கீழே விழுந்தார் சிவராஜ். பின்பு அவர் மீதும் ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் தலை, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சிவராஜ் க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.