புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி கும்பகோணத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் மண்டல செயலாளர் சதா .மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி. அசோகன் ஆகியோர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரியும் , சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறையினரை கண்டித்தும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் க.செ. முல்லை வளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *