புதுச்சேரி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் போதைத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் தலைமையாசிரியர் வாணி விலங்கியல் விரிவுரையாளர் லோகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி சமூக நலத்துறையும் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து நடத்திய பேரணி தொடக்கத்தில் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார். போதை ஒழிப்புத் திட்ட பொறுப்பு அதிகாரி விரிவுரையாளர் முத்துக்குமார் கருத்துரை வழங்கினார்.

பேரணி பள்ளியில் தொடங்கி வேப்பமர நிறுத்தம் ஏழை மாரியம்மன் கோவில் சிவன் கோயில் வடக்குத் தெரு காமராஜ் நகர் வழியாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன், பட்டதாரி ஆசிரியர் நாகராஜன் உடற்கல்வி ஆசிரியர் ரகு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *