தென்காசி மாவட்டம் நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரியில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய நல்லுணர்வு விளையாட்டு போட்டிகளில், கிரிக்கெட் இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.
காவல் துறை சார்ந்த கிரிக்கெட் அணியினரும், மடத்தூர் கிரிக்கெட் கிளப் அணியினரும் பங்கேற்றனர்.
நல்லூர் சேகரத் தலைவரும், மேற்கு சபை மன்ற தலைவர் ஆன அருட்திரு. அறிவர். பிரே எஸ் ஜேம்ஸ் துவக்க ஜெபம் செய்தார் ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் தலைமை வகித்தார்.
நல்லூர் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன் மற்றும் ஆலங்குளம் கூடுதல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் முனைவர். வில்சன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் கூடுதல் செயலாளரும், தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆன ஆர் கே காளிதாஸ் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆலங்குளம் ஒன்றிய நல்லூர் கவுன்சிலர் திரு. எழில்வாணன், என்.டி டி ஜவுளி கடை அதிபர் . தேசிங்ராஜன், வழக்கறிஞர் சாந்தகுமார் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் காவல் துறை ஆய்வாளர் சாகுல் ஹமீது, நல்லூர் ராபர்ட், மாணிக்கம் ஆகியோர் ஆலங்குளம் காவல் துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரோடு இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
கிரிக்கெட் போட்டியினை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள மற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டு களித்தனர்.