தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப் பெருந்தகை பணி சிறக்க வாழ்த்துக்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிக்கை.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப் பெருந்தகை பணி சிறக்க மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக செவ்வனே செயலாற்றி வந்தவர். தமிழக சட்டசபையின் பொது கணக்கு குழு தலைவராகவும் எஸ்சி எஸ்டி நலக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றி வரும் செயல்பாட்டாளருக்கு தற்போது இந்தப் பணி வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. இந்தியா கூட்டணி இமாலய வெற்றி பெறுவதற்கு இணைந்து களமாடுவோம்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருமை சகோதரர் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு
ராஜேஷ் குமார் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் வழியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் செயலாற்ற இவ்விருவரின் பங்களிப்பு உறுதியாக இருக்கும் என்ற திடமாக நம்புகிறேன். பாசிசம் வீழ்த்தப்பட செரிவான வியூகத்தோடு இந்தியா கூட்டணி வெற்றி பெறட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *