அலங்காநல்லூர்

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் மண்டல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கிராமந்தோறும் செல்வம் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி, கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

மண்டல பொருளாளர்ஓம்சக்திவீரபுத்திரன், வரவேற்பு உரையாற்றினார் கிளை தலைவர் போத்திராஜா, முன்னிலை வகித்தார் மாவட்ட இளைஞரணி தலைவர் சிவராமன், தலைமை உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியது. 10 ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி தலைமையிலான அரசின் மகத்தான திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்போம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேனி பாராளுமன்றத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்படுபவரை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் வரும் 2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடைபெறும் தமிழக முதல்வராக மாநில தலைவர் அண்ணாமலை தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்தனர்.

இதில் பிரச்சாரப் பிரிவு மாநில செயலாளர் புதூர்ராஜா, சோழவந்தான் தொகுதி அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி,தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் ராம்தாஸ், மண்டல பொதுச்செயலாளர்கள் மதன்ராஜ், லோகநாதன். மாவட்ட பிரச்சார பிரிவு செந்தாமரைகண்ணன், ராணுவ பிரிவு முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் அசோக்குமார் மாவட்டச் செயலாளர்கள் ரவிசங்கர், ஜெயபாண்டி, தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் ராமதுரை, மற்றும் குமரன், அனுசுயா, சிறுவாலை கண்ணன், ஒன்றிய பொதுச் செயலாளர் கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *