யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் 151 வது வார மரம் நடும் விழா மதுரை யானைமலை ஒத்தக்கடை காவல் நிலையம் எதிரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கல்வித்தாய் கொடிக்குளம் பள்ளியை தரம் உயர்த்த கோடிக்கணக்கான மதிப்பிலான நிலத்தினை வழங்கிய ஆயி என்ற பூரணம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். விழாவில் தங்க மகள் ஜனனி விருது பூரணம் அம்மா விற்கு வழங்கப்பட்டது.

விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பசுமை ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், காவல்துறை நண்பர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள், பெற்றோர்கள், ஊர் பெரியவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *