சமயநல்லூர்மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி
ஜெ.ஜெயலலிதா, அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா திடலில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார்

ஒன்றிய கழக துணைச் செயலாளர் மலையாளம், முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் பேசுகையில் அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் மக்களுக்காக புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி காக்கப்பட்டு பொதுமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருந்தார்கள் அதனை தொடர்ந்து சேலத்து சிங்கம் கொங்கு நாட்டு தங்கம் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் தொடர்ந்து அதிமுக வெற்றி நடை போடுவதாகவும் கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில்மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு வேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்

கொலை, கொள்ளை, மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்டவியே தான் திமுகவின் சாதனை எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம் போராட்டமாக தான் உள்ளது என்று தெரிவித்தார்..

தலைமைக் கழக பேச்சாளரும் நடிகருமான வையாபுரி கலந்து கொண்டு பேசுகையில் தாயுள்ளத்தோடு மக்களை நினைத்து மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா உதாரணத்துக்கு கூற வேண்டும் என்றால் மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி உள்ளிட்ட மற்றும் தாய்மார்களுக்கு திருமண உதவித்தொகை 4 கிராம் தங்கம்
பேர்காலத்தில் உதவும் பெட்டக பாக்ஸ் பெண் பிள்ளைகளுக்கு உதவித்தொகை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி இவ்வாறு சொல்லி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அத்தனை திட்டங்களையும் முடக்கி திமுக அரசு இன்று மக்களுக்கு எந்த ஒரு நலனையும் செய்யவே இல்லை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணன் எடப்பாடி தலைமையில் அதிமுக 40 தொகுதிகளும் மகத்தான வெற்றி பெரும் என்று தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன் வெற்றிவேல், தமிழரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், எஸ்.எஸ். சரவணன், ராஜா ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், காளிதாஸ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, நகர செயலாளர்கள் அழகுராஜ், குமார், அசோக்குமார், மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மலர் கண்ணன், ராகுல், தங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதாராதாகிருஷ்ணன், அம்முலோகேஸ்வரன், அலங்காநல்லூர் நிர்வாகிகள் ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத் எம்ஜிஆர் இளைஞர் அணி சண்முகசுந்தரம், விவசாய அணி வாவிடமருதூர்
ஆர்.பி.குமார், நிர்வாகிகள் முடுவார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், தொழிலதிபர் முத்துகிருஷ்ணன், உமேஷ் சந்தர், கல்லணை மனோகரன், கேட்டுகடைமுரளி,
செந்தில்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *