ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.
ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம். திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜீலியட் மல்லிகாபாய் வரவேற்புரை வழங்கினார் ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலர் யசோதா,முன்னாள் வட்டார கல்வி அலுவலர்எ.சி. ஆறுமுகம்,முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆலங்குளம் தாமோதரன், பாப்பக்குடி பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காசிநாதபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரமினா ( எ ) குருவம்மாள் வாழ்த்துரை வழங்கினர்.
நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில்
ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம். திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, மாணவர்களோடு கலந்துரையாடினர்.
அதனையெடுத்து முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினை பரிசுகள் வழங்கினார்கள் இவ்விழாவில் மாவட்ட அரசு வழகறிஞர் சிவக்குமார், புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால் விநாயகம், துணை தலைவர் வேல்த்துரை, ஒன்றிய கவுன்சிலர் சண்முக ராம், வார்டு உறுப்பினர் பார்வதி,பள்ளி மோலாண்மை குழுதலைவர் இந்திரா, காசிநாதபுரம் பரமசிவன், முன்னாள் சத்துணவு அமைப்பாளர் முத்துவேல், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள் உதவி ஆசிரியர் லோரான்ஸ் ஞானதுரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்சியில் தொழில் அதிபர் மணிகண்டன்,
ஆலங்குளம் உதவி காவல் ஆய்வாளர்கள்
கிருஷ்ணகுமார், பள்ளி உதவி ஆசிரியர்கள் மரிய பெனிதா,மேரி மதலேன், ஜெயராஜ், புதுப்பட்டி ஆசிர்வாதம், ஏசுராஜன், சத்துணவு அமைப்பாளர்
கனகவள்ளி. உள்பட பலர் கலந்து கொண்டனர்
விழா இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் சரஸ்வதி நன்றியுரை வழங்கினார் அதனை யெடுத்து குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.