ஆவுடையானூர் ஊராட்சி, சாலடியூரில் திமுக சார்பில் திண்ணை பிரசாரம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்

தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட சாலடியூரில் இல்லந்தோறும் ஸடாலின் குரல் திண்ணை பிரசாரம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திண்ணை பிரசாரத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கினார்.

அப்போது, திராவிட மாடல் அரசின் சாதனைளை பட்டியலிட்டதுடன், 2024ம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறினார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித்தரப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் குறும்பலாப்பேரி டால்டன், வளர்மதிராஜன், பாண்டியன், ராமர், கலைச்செல்வன், கிருஷ்ணமணி, முருகன், ராபர்ட், மார்சல் பிரபு, ராஜேந்திரன், களஞ்சியம், மாரிச்செல்வன், பண்டாரம், கபில்தேவதாஸ், வக்கீல் ஹரி, பூதத்தான், ரிக்கி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *