திருவொற்றியூர்
ஐந்து வருடம் சாதனையை புத்தகமாக வெளியிட்டு வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் சி எஸ் ஆர் நிதியிலிருந்து 20 கோடிக்கு மேல் வளர்ச்சித் திட்டங்கள் செய்துள்ளதாகவும் திமுக உதயசூரியன் சின்னத்தில் 40 தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என பேட்டி
திருவொற்றியூர் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே பி பி சாமி அவர்களது நான்காவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி திருவொற்றியூர் கே வி கே குப்பம் பகுதியில் மறைந்த கே பி பி சாமி அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் முதியோர் மற்றும் திறனாளிகளுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது
வட சென்னை. நாடாளுமன்ற உறுப்பினர்கள். குறித்து சென்னையில் கண்டா வர சொல்லுங்க .என்று வாசகத்துடன் போஸ்டர்கள். ஒட்டிய நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது போஸ்டர் ஒட்டியவர்கள் தங்கள் பெயரையும். பதிவு செய்யவில்லை. போஸ்டர் தயார் செய்த நிறுவனத்தையும். பதிவு செய்யவில்லை ஆகையால். இது எதிர்க்கட்சிகளில் செயல் ஐந்து வருட காலங்களில் ஆறு தொகுதியிலும் ஏராளமான நலத்திட்டங்கள் பள்ளி கட்டிடங்கள் செய்துள்ளதாகவும். அதையே ஒரு புத்தகமாக தற்போது. வெளியிட்டு. உள்ளதாகவும். இது போன்ற அவதூறு பரப்பவர்கள். வரும் தேர்தலில் மக்களே பாடம் கற்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார்
ஆறு தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி உள்ளதாகவும். எண்ணூரில். தூண்டில். வளைவு .அரசு பள்ளி கட்டிடம். மேம்பாலம். உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள். இதுவரை செய்து வந்த நிலையில் புயல் காலத்தில் அனைத்து. பகுதிகளும். நேரில் சென்று பார்வையிட்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை. வழங்கியதாகவும் அந்த திட்டங்களை. வைத்து அனைவரும். வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.