ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் நகராட்சி பகுதியில் உழவர் சந்தை
திருவாரூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 75.00 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள திருவாரூர் உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ திறந்து வைத்தார்
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார்
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 2022-2023ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையின்படி 75.00 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள திருவாரூர் உழவர் சந்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது
நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா திருவாரூர் ஒன்றியக்குழுத் தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் இரா .சங்கர் பணிநியமன குழு உறுப்பினர் வாரை பிரகாஷ் நகர மன்ற உறுப்பினர்கள் டீ செந்தில் எஸ் என் அசோகன் வரதராஜன் ரஜினி சின்னா வேளாண்மைதுறை இணை இயக்குநர் ஏழுமலை வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்