செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியின் உறுதிமொழி ஏற்பு விழா
கும்பகோணம் தாலுக்கா சாக்கோட்டையில் அமைந்துள்ள மாதா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கிவரும் செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியின் 14வது உறுதிமொழி ஏற்பு- விளக்கு விழாவானது கும்பகோணம்
எஸ். இ.டி மகாலில் நடைபெற்றது.
கல்லூரியின் தாளாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஐ.மரியசெல்வம், தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கல்லூரியின் துணை பேராசிரியை பிரியதர்ஷினி, வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்,அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நோடல் அதிகாரி டாக்டர் ராஜேஸ்வரன்,அருட் சகோதரி. செலின், இயற்பியல் முதுநிலை ஆசிரியர் முனைவர் அன்பரசு, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை செவிலியர் கண்காணிப்பாளர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு செவிலியர் சேவையின் சிறப்பினைப் பற்றியும் வாழ்க்கையில் வெற்றி அடைவது பற்றியும் ஊக்கப்படுத்தினர்.
கல்லூரியின் துணை முதல்வர் கிருத்திகா, செவிலிய பணிக்கான உறுதிமொழியைக் கூறி செவிலிய மாணவிகளை வழிநடத்தினார்.
விழாவில் செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள், நூற்றுக்கனக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணை பேராசிரியை
செல்வினிருத்திகா நன்றி கூறினார்.