தஞ்சாவூர் மாநகராட்சி சொந்தமான சரபோஜி மார்க்கெட் சந்தை கடைகளுக்கு மக்கள் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் கோரிக்கை.

ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் எம்.சபீக் தமிழக முதல்வர்க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

தஞ்சாவூர் மாநகராட்சி சொந்தமான
சரபோஜி மார்க்கெட் கடைகளுக்கு அதிக வாடகை, கூடுதல் டெபாசிட் போன்ற காரணங்களால் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயங்கி வந்த நிலையில், ஏலம் எடுத்தவர்களும் வியாபாரம் இல்லை எனக் கூறி அடுத்த சில மாதங்களிலேயே கடைகளை மூடிவிட்டனர், பலர் இந்த நிலையை அறிந்து ஓரிரு, மாதங்களிலே கடை வேண்டாம் என எழுதி கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் நூற்றூக்கும் மேற்பட்ட சிறு, குறு, தொழில் செய்வதற்கு ஆசைப்பட்டு தாலி செயின்களை விற்றும், அதிக வட்டிக்குப் பணம் பெற்றும் கடைகளுக்கு பணம் கட்டியுள்ளார்கள்
சுமார் இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்ட கடைகளுக்கான டெபாசிட் தொகையைத் தர மாநகராட்சி நிர்வாகம் ஏழை மக்களை அளக்களிப்பதால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள் எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *