புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு..

மாநில அளவிலான பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது. மகளிர்க் காண 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்ட போட்டியில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகள் பங்கேற்று விளையாடினர்.

இதில் மாநில அளவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தூயவளனார் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

இதில் வெற்றி பெற்ற கால் பந்தாட்ட வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் , பரிசு பொருட்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெபமாலை, உடற்கல்வி ஆசிரியர் குளோரி மற்றும் சுந்தரி , ஃப்ரீடா ஜாக்குலின், பேபி லதா மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி பேசும்போது:
மாணவிகள் படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் மாநில அளவில் பெற்று வெற்றியைத் தொடர்ந்து தேசிய அளவில் ஒலிம்பிக்கில் பங்கு பெற வேண்டும் என்று மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்.

தேர்வு எழுதக்கூடிய மாணவிகளுக்கு அனைவரும் வெற்றி பெற வேண்டும் அனைவரும் சாதிக்க வேண்டும் என்று அவர்களுக்கும் தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் அப்பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *