பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய. 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வீரமாகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் 108 சங்காபிஷேகம், விசேஷ மூல மந்திர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நவசக்தி அர்ச்சனை நடைபெற்று,மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.குழந்தைகள் சிறப்பாக கல்வி பயில வேண்டி ஸ்ரீமேதா ஸூக்த வித்யா ஹோம பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜி. அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *