பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு, இலவச சுவன ஊர்தி வாகனம்..
முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சபை சார்பில், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு இலவச சுவன ஊர்தி வாகனம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளரும், தலைமை இமாமுமான மௌலவி அப்துல் மாலிக் சிராஜி சிறப்பு பேருரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான சக்கராப்பள்ளி, இராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜமாஅத்தார்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.