இஸ்லாமியர்களுக்கு எதிரான சி ஏ ஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக இனி தலை தூக்கக்கூடாது,.

இந்த முறை பாஜக வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சி அமைந்துவிடும் சீர்காழியில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கம் மற்றும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய திருச்சி சிவா எம் பி பேசியதாவது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முடிவில் தான் உள்ளது ஜனநாயக ஆட்சி இருக்குமா அல்லது அல்லது ஒற்றை ஆட்சி அதிகார ஆட்சி தொடருமா மத்திய பாசிச அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி உள்ளது

அதில் குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மிகவும் அபாயகரமானது இந்த சட்டத்தின்படி சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் குடியேறலாம் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்கள்

ஆனால் இதில் இஸ்லாமியர்களை முழுவதுமாக தவித்தனர் சட்ட மசோதா குறித்த விவாதத்தின் போது அதில் இஸ்லாமியர்களை சேர்க்க வேண்டும் இலங்கை சேர்ந்த தமிழர்களை சேர்க்க வேண்டும் அதேபோல் இனம் சார்ந்து உள்ள அனைவரையும் சேர்க்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது இச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பின்போது அதிமுக எம்பிக்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்

இதனால் அச்சட்டம் நிறைவேறியது ஆனால் இன்று இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுப்போம் என பேசி வருகிறார்கள் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டத்தில் வாக்களித்த அதிமுக இணை தமிழகத்தில் தலை தூக்கக்கூடாது என பேசினார்

அதேபோல் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் அதில் திருத்தம் மேற்கொண்டு வந்து சிறுபான்மையினரை மேலும் அச்சுறுத்தியுள்ளனர் குறிப்பாக ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி தீவிரவாத செயலில் ஈடுபடுபவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தான் குற்றவாளிகள் என விசாரணையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது

ஆனால் தற்போது இவர்கள் கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் படி எந்த ஒரு தனி நபரையும் தீவிரவாதி என சிறையில் அடைக்க முடியும் அவர்களால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்து வெளியே வரவே முடியாது இது முற்றிலும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சட்டமாகும் இதனையும் ஆதரித்து அதிமுக வாக்களித்துள்ளது பாஜக அரசு தொடர்ந்து மக்களுக்கு பாதகமான சட்டங்களை இயற்றி வருகிறது எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *