தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி..

துப்புரவு தொழிலாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அசைவ உணவுகளை வழங்கிய திமுக நிர்வாகிகள்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட உரக்கிடங்கில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71- வது பிறந்த நாளை முன்னிட்டு, அய்யம்பேட்டை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பேரூராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அசைவ உணவு பொட்டலங்களை திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

அய்யம்பேட்டை திமுக நகர செயலாளர் டி.பி.டி. துளசிஅய்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட சிறபான்மை பிரிவு தலைவர் யூசுப்அலி, பேரூராட்சி மன்ற தலைவர் புனிதவதி குமார், துணைத் தலைவர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் துப்புரவு தொழிலாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அசைவ உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பாவை.ஹனீபா, ராயல் அலி, அன்சாரி, ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட துணை அமைப்பாளர் பக்கீர்மைதீன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *