புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரில் ரூ. 24 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இன்று தொடங்கி வைத்தார்.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகர் விரிவாக்கம் பகுதியில் ரூ. 24 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் திருக்காமேஸ்வரர் ஊர் முக்கியஸ்தர்கள் ரமணன், தண்டபாணி, கணேஷ், பாலமுருகன், முருகேசன், கன்னியப்பன், வீரபுத்திரன், அறிவழகன், சிவக்குமார், ரமேஷ், காமராஜ், சுந்தர், குமரன், அண்ணாதுரை, லட்சுமணன், ராமன், நாராயணன், ஜெயமூர்த்தி, செல்வம், பாலகோபாலன், வெங்கடேசன், சுந்தரராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், தொகுதி பொருளாளர் கந்தசாமி, ராஜி, சபரிநாதன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மிலிட்டரி முருகன், கார்த்திகேயன், திலகர், தங்கராசு, வேதாசலம், மனோன், முத்து, கோதண்டம், முருகையன், ராமஜெயம், ரகு, அன்பு, மோகன், நாகராஜ், கமல் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.