புதுச்சேரி தாழ்த்தப்பட்டோர் நிதியை முழுமையாக செலவிடவும் அனைத்து துறை செயல்பாட்டை கண்காணித்து திட்ட பயன்களை மக்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையின் கீழ் புதுவை மாநில தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி பேரவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற இயக்குனர் அனுபவம் உள்ள புதுவை சிவில் சர்வீஸ் அதிகாரியுமான அன்பழகன் தாழ்த்தப்பட்டோர் வளர்ச்சி பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதற்கான நியமன ஆணையை முதல் அமைச்சர் ரங்கசாமி அன்பழகனிடம் வழங்கி வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *