தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், ஒன்றிய, நகர திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
ஆலங்குளம் பேருந்து நிலைய வளாகத்தில்
கொண்டாடப்பட்டது.
நடைபெற்றஇந்நிகழ்ச்சிக்கு,ஒன்றியச் செயலாளர் மு.செல்லத்துரை, நகரச் செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பொதுக்குழு உறுப்பினர் பாப்புலர் ஏ.செல்லத்துரை, முன்னாள் நகர துணைச் செயலாளர் வி.அண்ணாவி காசிலிங்கம், தொழிலதிபர் ஜி.செல்வம், மகளிரணி சரஸ்வதி பாஸ்கரன்,மாவட்டப் பிரதிநிதி நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரப் பொருளாளர் எஸ்.சுதந்திரராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக,திமுக பகுத்தறிவு பாசறை அ.எழில்வாணன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, தமிழக அரசின் சாதனைகள் குறித்துப் பேசினார். தொடர்ந்து, முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.எம்.ஜோசப் தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், மூத்த நிர்வாகி ராஜையா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் செல்லப்பா,கிளைச் செயலாளர் அல்போன்ஸ், மாணவரணி சுப்பையா, சாலமோன் குட்டி புலி (எ) கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வீடு வீடாகச் சென்று கொடுத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.