புதுச்சேரி கதிர்காமம் தொகுதி எல்லைப்பள்ளி சாவடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது.

பள்ளி மாணவி ஹர்ஷிதா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியை புவனேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். பி. ரமேஷ் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் மற்றும் வட்டம் இரண்டு பள்ளி துணை ஆய்வாளர் குணசுந்தரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பள்ளி மாணவர்களின் வண்ண கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தனி நடனம், குழு நடனம் உட்பட சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்திக் காட்டினர்.

மாணவர்களுக்கு கேடயங்கள் மற்றும் பட்டமளிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் மாலதி, குமாரி, எழிலரசி, மாலா, மற்றும் பள்ளி ஊழியர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இறுதியாக ஆசிரியை ஆர்த்தி நன்றியுரை கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *