புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த நாராயணன் – மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மதியம் மாயமானார்,

இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மாணவி அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதி வாய்க்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு….

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவரும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.G.நேரு (எ)குப்புசாமி MLA அவர்கள் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *