புதுச்சேரி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் ஆன்மீக சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் உறுப்பினர்கள், சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில தலைவர் திரு.சடாட்சர மூர்த்தி, மாநில செயலாளர் திரு.இராகவேந்திர சிவம் , மாநில மகளிர் அணி தலைவி திருமதி பிரியா சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக லாசுப்பேட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் திரு.சதாசிவம் , பொருளாளர் மோகன், ஓதுவார் திரு.அனந்த வேல், கமிட்டி உறுப்பினர் திரு.தண்டபாணி, திரு.ஆனந்தன் திரு.பழனிசாமி மற்றும் லயன் திரு.கணேசன் , திரு.தணிகாசலம் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கடந்த ஒரு ஆண்டாக சேவை செய்யதவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *