புரட்சி பாரதம் கட்சியின் புதுவை மாநில துணை செயலாளர் ச.நாகராஜன் தனது அறிக்கையில் கூறுவதாவது…
புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில், ஒன்பது வயது சிறுமி ஆர்த்தி கடத்தப்பட்டு பாலியலுக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் பெரும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் புதுவையில் பெருகும் கஞ்சா கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெளியில் வர முடியாத அளவிற்கு கடும் தண்டனை, அல்லது மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்