அரியலூரில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கசொக கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு INDIA கூட்டமைப்பின் ஒரு அங்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் நாடாளுமன்ற சிதம்பரம் தொகுதி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிட உள்ளார்.

தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளின் அனைத்து பொறுப்பாளர்களும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று விசிக நிர்வாகிகளையும் கூட்டணி நிகழ்ச்சி தொண்டர்களையும் கேட்டுக் கொண்டார்

இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சிறப்புரையாற்றினார் தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்

இதில் கம்னியுஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ராமநாதன், இளங்கோவன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர், திமுக கழகத்தின் நிர்வாகி பெருநற்கிள்ளி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் என 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *