பொம்மன்பட்டி காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் பலியிட்ட சக்தி கிடா கறியை பாரம்பரியை முறைப்படி பங்கீட்டு வீடுதோறும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி பொம்மன்பட்டி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் காளியம்மன் கன்னிமார் கருப்பபுசாமி.முனியாண்டி.மற்றும் விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்.19.ந்தேதி கோவில் முன்பு செவ்வாய் சாட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர்.

இதைதொடர்ந்து ஏப்.26.ந்தேதி மாலை கோவில் முன்பு பொங்கல் வைத்து பின்பு கிராம மக்கள் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் வைகையாற்று பிரிவு கால்வாய் சென்று பூசாரி அழகர்சாமி தலைமையில் சக்தி கரகம் எடுத்து கிராம வீதீகளில் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.அன்று இரவு கலை நிகழ்ச்சி நடந்தது

இதன்பின் ஏப்.27.ந்நேதேதி அதிகாலை கருப்புசாமிக்கு சக்தி கிடா.பலியிட்டனர்..பலியாட்ட கிடாகறியை பாரம்பரியை முறைப்படி கிராமத்தில் உள்ள 200.க்கு மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு. தலா ஒரு கைபிடி அளவு கறியை பிரசாதமாக வழங்கப்பட்டது.இதை வரிசையில் நின்று பயபக்தியுடன் கிராம மக்கள் பெற்று சென்றனர்.

ஏப் ;28.ந்தேதி இன்று காலை 9.மணியளவில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று வைகையாற்றில் கரைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.இவ் விழா ஏற்பாடுகளை பொம்மன்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *