திருப்பத்தூரில் புதிய மாவட்ட நீதிமன்றம் திறப்பு விழா. நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை இன்று காலை 10.30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டூ தேவனாந் அவர்கள் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தை காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நீதிபதி முருகன், திருப்பத்தூர் நீதிபதிகள் மீனாகுமாரி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *