சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் பகுதியில் 7669 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை உடைத்து மதுபான கடையில் உள்ள பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.
அரசு மதுபான கடையை உடைக்க முடியாததால் அருகில் செயல்பட்டு வந்த மதுபான பாரின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த கொய்யாப்பழம் வெள்ளரிக்காய் மற்றும் கேஸ் அடுப்பு பாத்திரங்கள் மற்றும் கோழி இறைச்சிகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை டி.எஸ்.பி கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.