மதுரை, மார்ச்.30-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,
மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக,
அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால்
அறிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் மீர்பாஷா, பூக்கடை கண்ணன், கே ஆர் சுரேஷ் பாபு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி முத்துக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் போஸ், மூவேந்திரன் மற்றும் வார்டு தலைவர்கள் குமரகுரு, கோவிந்தராஜன், பகுதி தலைவர் சக்திவேல், சரவணராஜ், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பஞ்சவர்ணம் உள்பட நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *