வயலூர் ஊராட்சியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்மதுரை மேற்கு ஒன்றியம் வயலூர் ஊராட்சியில் தேனி தொகுதி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
தொடர்ந்தவர் பேசியது அவர் என்னை ஓட்டு போட்டு வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் இப்பகுதிக்கு தேவைப்படும் எண்ணற்ற திட்டங்கள் 100 நாள் வேலை செய்பவர்களுக்கு தொடர்ந்து வேலை மற்றும் அதற்கு ஏற்ற ஊதியம் விவசாயத்திற்கு உரம் தட்டுப்பாடு இன்றியும் கிடைக்க வழிவகை செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்க வழிவகை செய்யப்படும் எடப்பாடி ஆசி பெற்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இவருடன் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர்ராதாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல்,சிறுவாலை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள்ராஜு, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், சிறுவாலைசெல்வம், உள்ளிட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..