மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
கேட்டுகடை தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி கழக செயல் வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் தேனி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளருமான டிடிவி தினகரன், கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் குக்கர் சின்னத்தில் ஓட்டு சேகரித்தார் முன்னதாக பேசிய அவர் திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தனர்
ஆனால் திட்டங்கள் அனைத்தும் அவர்களது இல்லத்துக்கு தான் சென்று கொண்டுள்ளது மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு போட்டி வேட்பாளர்களே இல்லை என்று தெரிவித்தார் தொடர்ந்து கூறிய அவர் எடப்பாடி பழனிச்சாமி அண்கோ பதவி கொடுத்து அழகு பார்த்த சின்னமாவையே நீங்கள் யார் என்று கேட்டார் உங்களுக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று தெரிவித்தார்
பின்னர் எங்களை கட்சியை விட்டு நீக்கி ஏமாற்றினார் இப்பொழுது கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் துணையாக இருந்த பன்னீர்செல்வத்தையும் கட்சியை விட்டு நீக்கி ஏமாற்றிவிட்டார் துரோகத்தின் முழு உருவமே பழனிச்சாமி தான் அவர் நினைத்துக் கொண்டிருப்பது இரட்டை இலை மற்றும் கட்சி அவரது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிக் கொண்டுள்ளார் விரைவில் அம்மாவின் ஆசியுடன் கட்சியும் இரட்டை இலை சின்னமும் நமது பக்கம் வரும் என்று தெரிவித்தார்
. கடந்த பத்து ஆண்டுகளாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி தான் வருவார் உலக நாடுகளே போற்றும் ஒரு ஒப்பற்ற தலைவராக மோடி விளங்குகிறார் என தெரிவித்தார் தொடர்ந்து கூறியவர் நான் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன் அப்பகுதியில் பட்டி தொட்டி எங்கும் எனக்கு நன்கு தெரியும் சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூருக்கு இப்போது தான் வந்துள்ளேன் விரைவில் இப்பகுதியும் எனக்கு முழுமையாக தெரியவரும் எனவே தாங்கள் அனைவரும் எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தெரிவித்தார்.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர் தேர்போகிபாண்டியன், டாக்டர் செந்தில்குமார், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகானந்தம், டேவிட் அண்ணாதுரை, மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் மேலூர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபால், சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன், மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், மற்றும் தஞ்சைபாலு, ஒன்றிய செயலாளர்கள் சம்பக்குளம்.வ.ரகு, ஜெயபாண்டி, ராஜன், மதன்,நகரச்செயலாளர்கள் ராஜபிரபு, முருகன், கருணாமூர்த்தி,
மற்றும் கூட்டணிக் கட்சியான ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர்கள்
சேதுசீனிவாசன், ஜோதிமுருகன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் கோவிந்தமூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.தனுஷ்கோடி, வட்டாரத் தலைவர் கார்த்திகேயன், பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் குலமங்கலம் ராஜா, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..