திருவொற்றியூர், பெரியார் நகரில், வடசென்னை பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா, நேற்று மதியம், பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது :

பா.ஜ., ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு, 36,000 கோடி கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வீடு கட்டி தரப்பட்டுள்ளது. வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் சட்டம் படித்தவர்.

உயர்நீதிமன்றத்தில், நான்கு முறை பார் கவுன்சில் தலைவராக இருந்துள்ளார். உங்களுக்காக உங்களில் ஒருவராக இருந்து பணியாற்றி கூடியவர்.

ஒரு முறை பால்கனகராஜூக்கு ஓட்டளியுங்கள். 24 மணி நேரமும் உங்களுக்காக பணி செய்வார். தமிழ்நாட்டில் தாமரை மலரும். தமிழ்நாடு வளரும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, கொளுத்தும் வெயிலில், பெரியார் நகர், ஏகவல்லியம்மன் கோவில் தெரு, மஸ்தான் கோவில் ஆகிய பகுதியில் வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *