சூலூரில் தூய்மை பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஓட்டு போடும் பொதுமக்கள் 100% தங்களுடைய வாக்கினை செலுத்த சூலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி என் வாக்கு என் உரிமை என்கின்ற கோஷத்துடனும் ஒலிபெருக்கியின் வாயிலாக பொதுமக்கள் வாக்களிப்பது நமது கடமை என்றும் வாக்குக்கு பணம் பெறுவது குற்றம் என்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது

சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் துணை வட்டாட்சியர் தேர்தல் அலுவலர் சுமதி வருவாய் ஆய்வாளர் கங்கராஜ் சூலூர்கிராம நிர்வாக அலுவலர் சுஜி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கோகுல், மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *