இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு அரசு இருக்குமானால் அது திமுக தான்..

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். பாபநாசத்தில் குற்றச்சாட்டு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலினை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வருகை புரிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும் போது..

மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடமாடிக் கொண்டிருக்கும் சிறுத்தையை பிடிக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் 10-வருடங்களில் பெரும் வளர்ச்சி அடைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுவதாகும்,

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்கள் மீது சுமையை ஏற்றிய அரசு இந்தியாவில் ஒரு அரசு இருக்கும் என்றால், அது தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடிய திமுக எனவும், பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *