நெல்லையில் பாஜகவின் பிரச்சாரம் அனலடித்து கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக, சர்ச்சைகளும், பரபரப்புகளும் கிளம்பி கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் தற்போது அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள மாவட்ட அரசாங்க தொடர்பு பிரிவு தலைவர் சேகர் பாண்டியன்,துணை தலைவர் மங்கள சுந்தரி செய்தியாளர்களிடம் கூறுகையில்…

பாஜக மோடி தலைமையில் 10 ஆண்டுகளாக பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டிருக்கிறார் அதில் குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம், இலவச கேஸ் அடுப்பு திட்டம், கழிப்பறை திட்டம், ஆயிஸ்மா பாரத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி செய்து கொண்டு இருக்கிறார் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ வசதி கொடுக்கக்கூடிய ஆயிஸ்மா பாரத் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்

அப்படி பொது மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து வரும் நமது பாஜக மோடி அரசு தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் அதற்கு நம்முடைய நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும் நாம் அனைவரும் ஒன்று கூடி நயினார் நாகேந்திரன் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நபர் அவர் எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர் வெள்ள பாதிப்பின் போது அவர் பல்வேறு பகுதிகளில் வெள்ள நிவாரண உதவிகளை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது …

மேலும் திமுக அரசாங்கம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுத்துவிட்டு பெண்களை இழிவாக பேசுவது பெண் என்கிற முறையில் எனக்கே பெரும் வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார் மேலும் நாம் பகுதியில் உள்ள பெண்கள் தினமும் காலையில் வீடுகளில் வாசலில் தாமரைக் கோலமிட்டு வேட்பாளருக்கு நமது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துக் கொண்டார்.அப்போது அரசாங்க பிரிவு அம்பை மண்டல தலைவர் ராமர் பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கண்ணன் மற்றும் கிளை தலைவர் விஸ்வநாத் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *