திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு பல்வேறு பகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மாதேஸ்வரனை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் பிரச்சாரம்…

நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் திருச்செங்கோடு நகரப் பகுதியில்திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும்போட்டி வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியத்தில் மண்டக பாளையம் கொசவம்பாளையம் குமாரமங்கலம் போக்கம்பாளையம் காந்தி ஆசிரமம் ராயர்பாளையம் முகாசி 85 கவுண்டம்பாளையம் ஊஞ்சனை இளையாம்பாளையம் திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் மாதேஸ்வரனைஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மாண ஈஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதே போல் திருச்செங்கோடு நகராட்சி 1, 8, 17,18, 19, 20, 21, 22, 29, 23, 25, 27, 24, 28, 32, 30, 31, 33, 14, 16, 15, 12, 13, 4,3, 2 ,5 ,6, 11, ஆகிய வார்டு பகுதிகளில்நாமக்கல்நாடாளுமன்றத் தொகுதி திமுகவேட்பாளர் மாதேஸ்வரனுடன் சென்று திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நகர செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவருமான நடேசன் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திருச்செங்கோடு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *