மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி செக்போஸ்ட் பகுதியில் காய்ந்த மரக்கிளை உடைந்து தொங்கியதால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

உடனடியாக தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் உடனடியாக மரக்கிளையினை வெட்டி அகற்றி போக்குவரத்து சீர் செய்தனர்.

மரக்கிளையினை அகற்றும் பொழுது தேனீ கூட்டம் கலைந்ததால் அங்கு கூடி இருந்தவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *