பாபநாசம் அருகே வயலில் உழுது கொண்டிருந்த போது எதிர்பாராதரமாக டிராக்டர் சேற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து..

ஓட்டுநர் சேற்றுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வரும் தமிழரசன்(35). ரேவதி (26) குடும்பத்தினர். இவர்களுக்கு 14-வயதில் ஒரு ஆண் பிள்ளையும், 10-வயதில் ஒரு பெண் பிள்ளையும் இருந்து வருகின்றனர். தமிழரசன் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல இன்று காலை தமிழரசன் கிடங்காநத்தம் பகுதியில் சுப்பிரமணியனுக்கு சொந்தமான வயலில் உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் சேற்றில் தலைகீழாக கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் சேற்றுக்கு அடியில் தமிழரசன் சிக்கினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தமிழரசனை மீட்டு அருகில் உள்ள மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *