ஜோதிடர் அஸ்ட்ரோ மகாமணி .
2024 மே 1 ஆம் தேதி மதியம் 12:10 க்கு (திருகணிதமுறை) மேஷத்திலிருந்து ரிஷபத்திற்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார்.. இந்த வருட குரு பெயர்ச்சி பலன்களை ஒவ்வொரு ராசி வாரியாக பார்ப்போம்..
குறிப்பு: இது ராசிக்கான பொது பலனே..ஒருவருடைய ஊழ்வினை மற்றும் நல்வினை கர்மா என்ன செய்யும் என்பதை ஒருவருடைய ஜெனனகால ஜாதகமே தீர்மானிக்கும்..கோட்சாரம் மற்றும் தசா புத்தி வழி நடத்தும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..
தனிபட்ட ஜாதக ஆய்விற்கு..
அஸ்ட்ரோ மகாமணி
WhatsApp:8973061061 என்ற
எண்ணிற்கு தகவல் அனுப்பவும்..
மேஷம் ராசி நண்பர்களே…
இந்த குருபெயர்ச்சி ஏராளமான செல்வப் பெருக்கு உண்டாக்கும். உங்களுக்கு பகைவர்களே இருக்கமாட்டார்கள், தன் மனைவியோடு மிகவும் இன்பமாக வாழ்வதற்கான நிலையை கொடுக்கும். குரு இரண்டாம் வீட்டிற்க்கு வரும்போது குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் செய்கின்ற தொழிலில் நல்ல வருவாய் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள் எதிரிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மனகஷ்டம் ஏற்படலாம்.
இரண்டில் குரு வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி வரும் .இதுவரை உங்கள் ராசியில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்துக்கு மாறுகிறார். ஜென்ம ராசியில் இருந்தவரை உங்களை முன்னாலும் போக விடாமல் பின்னுக்கும் வந்துவிடாமல் தடுமாற வைத்தார் குரு பகவான். இரண்டாவது இடத்துக்கு பிரவேசித்தன் மூலம் மிகப் பெரிய மாறுதல்களையும் தன லாபத்தையும் தரப் போகிறார் குரு பகவான். வருமானம் பெருகுவதுமட்டுமல்லாமல் பலவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரப் போகிறது.
2-ஆம் இடம் என்பது குருபலம் பெறுகிற இடமாகும். குருபலம் பெற்றல் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. தேவைகள் பூர்த்தியாகும் நேரம் தனவரவு கிடைத்து செலவுகள் செய்தாலும் தெரியாது.
2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். நிறைய வருமானங்களும் லாபமும் திடீர் அதிருஷ்ட வாய்ப்பும் வரும். 2 ஆம் வீடு என்பது குடும்பஸ்தானமும்கூட. குடும்ப ஸ்தானத்திற்கு குரு வந்திருப்பதால் குடும்பத்தில் இவ்வளவு காலம் காணாமல் போயிருந்த அமைதி, மகிழ்ச்சி. நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும்
செல்வம் பெருகும். குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் அல்லது குழந்தை பிறப்பதன் மூலம் குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பதவி உயர்வும் ,விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிடைக்கும் இதுவரை இருந்த எதிரிகள் கூட அடங்கிப் போய்விடுவர் வீட்டில் நிம்மதியும், அமைதியும் பாசமும் பெருகும்.
அதே நேரத்தில் விபத்துக்கள் ஏற்படவும், உடல் நலன் பாதிக்கப்படவும் வாய்ப்புக்கள் உள்ளன உடல சோர்வும் வீன் வாக்குவாதங்களும் தேடி வரும் வருவாய் கூடினாலும் மருத்துவமனையில் அதை செல்விட நேரலாம்.
பொதுவாக 2 ஆம் இடத்திற்கு வரும் குரு திரண்ட செல்வத்தை வழங்கும் என்பார்கள் எனவே நீங்கள் பண மழையில் நனையப் போகிறீர்கள் குருவின் இந்த அமர்வு வாழ்வை வளமாக்கும் இதுதவிர குருவின் பார்வை பெறுகிற இடங்களான விவகாரம், ஆயுள், தொழில் ஸ்தானங்களின் வழியாகவும் அதிக நன்மை கிடைக்கும் பேச்சில் சத்தியமும் சாந்தமும் கலந்திருக்கும். திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். பணவரவு அதிகம் பெறுவதற்கான புதிய வழிவகை தோன்றும்
பொதுவாக 2ம் இடத்திற்கு வரும் குரு வசந்த காலமாக மாற்றும் . செயல் படுத்த முடியாத காரியங்களை எல்லாம் செயல்படுத்துவீர்கள்..
வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் இரண்டாமிடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வர் .. தங்கு தடையின்றி தனவரவு வந்து கொண்டே இருக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும் தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறத் தொடங்கும். தெய்வத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள் நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். அரசு அதிகாரிகளும், மேல் அதிகாரி களும் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் இக்காலங்களில் திட்டமிட்ட காரியங்களில் முன்னேற்றமும், உத்தியோக வகையில் தாமதம் அடைந்து வந்த பதவி உயர்வுகள் வந்து சேரும்படியான சூழ்நிலையும்
செய்தொழில் ஜீவன் வகையில் மேன்மையும், தேவைக்கேற்ற பணவரவும், பழைய கடன்கள் படிப்படியாக விலகும்படியான சூழ்நிலையும், புதிய வாய்ப்புகளும் இதன் தொடர்பான பயனங்களால் அனுகூலமும், தேவைக்கேற்ற பணவரவும் வந்து சேரும். குடும்பத்தில் மனதிற்கு இனிய சம்பவங்கள் நிறைவேறுவதுடன் ஷேத்திராடன பயணங்களும், ஸ்திர சொத்து சேர்க்கைகளும் அமையக்கூடும். வெற்றிகளைக் குவிக்கும் வியாழனின் பார்வை குரு பகவான் ஐந்தாம் பார்வையாக ஆறாம் இடத்தையும், ஏழாம் பார்வையாக எட்டாம் இடத்தையும் ஒன்பதாம் பார்வையாக பத்தாம் இடத்தையும் பார்வையிடுவதால் கடன்கள் விலகி வரவேண்டிய தொகை வந்து சேரும் பாக்கியமும், நீண்டநாளாக இருந்து வந்த நோய் நொடிகள் விலகி உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில்கள் சம்பந்தமான முயற்சிகளில் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமையும். சமுதாயத்தில் உங்களுடைய கௌரவம், புகழ் செல்வாக்கு கூடும் காலமிது. குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும், பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிந்து அந்த இடத்து ஆதி பத்தியங்களை துரிதமாக நடை பெற வைக்க போகிறது அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப்போகின்றன.
குருவின் பார்வை பலத்தால் எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, வழக்கு, உடல்நிலை, இட மாற்றம் தொழில் மாற்றம் போன்ற அனைத்திலும் நல்ல மாற்றங்களை கொடுக்க போகிறார் பட்ட கடன் தீரும் பரிதவிப்பு மாறும் கெட்டவர்களின் சகவாசம் மாறும்
ஆதாயம் தரும் காரியங்கள் ஏராளமாக நடைபெறும் போதுமான அளவு பொருளாதாரம் வந்து சேரும். பாயில் படுத்தவரின் நோய்கள் அகலும் மாற்று மருத்துவம் மகத்தான பலன் தரும் கிளை தொழில்கள் செய்யவும் வாய்ப்புகள் கைகூடி வரும் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். உங்கள் ராசியை விட்டு 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் குருவை வரவேற்க, முன்னதாகவே சிறப்பு வழிபாடுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் , எல்லையில்லாத நன்மைகளும் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை பார்க்கிறார். ஆறாம் வீடு என்பது நண்பர்கள், பகைவர்கள் நோய்
போன்றவற்றைக் குறிக்கிறது. நண்பர்களால் நன்மை ஏற்படும். நண்பர்கள் உதவியால் புதிய லாபங்களும் நன்மைகளும் ஏற்படும். நீங்கள் ஆரம்பிக்கப்போகும் புதிய தொழில் போன்றவற்றிற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள்.
குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை பார்க்கிறார். உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் என்பதால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்யம் மிக நல்ல நிலையில் இருக்கும். இத்தனை காலம் உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும் நீண்ட கால நோய்களால் கஷ்டப்பட்டவர்கள்கூட அதிலிருந்து நிலையாக மீள்வதற்கு வழி கண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டைப் பார்க்கிறார். பத்தாம் வீடு உத்யோக ஸ்தானம் உங்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சம்பளம் உயரும். பதவி உயரும் பல காலம் காத்திருந்த முன்னேற்றங்கள்
அலுவலகத்தில் நிகழும். திடீரென்று பெரிய தொகை ஒன்று அலுவலகம் மூலமாக வரும் புதிய உத்யோகத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வேறு நல்ல வேலை கிடைத்து மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வழிபாடு: சிவன் பார்வதி இருக்கும் ஆலயம் எது வேண்டுமானாலும் சென்று வழிபடலாம்… மற்றும் திருத்தணி முருகன் வழிபாடு சிறப்பை தரும்.
(நாளை ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்)