நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது இப்பகுதியில் காக்காச்சி, நாலுமுக்கு ,கோதையாறு,குதிரை வெட்டி போன்ற இடங்களில் தோயிலை தோட்டத்தில் சுமார் 800 க்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவில் இருந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் மின்சார துண்டிக்கப்பட்டது.. இதனால் காக்காச்சி பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது.

இதை சரி செய்ய நாலுமுக்கு டிரான்ஸ்பார்மரில் ஆபிரகாம் (45) என்பவர் ஏறி பியூஸ் போட்டுவிட்டது கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிது இதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மேலும் போலீசார் விசாரணையில் இவர் காக்காச்சி தோயிலை தோட்ட கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருவதாக தெரியவருகிறது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *